
சமைக்க தேவையானவை
- புளிச்சக்கீரை – 1 கப்
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/4
- டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் தனியா
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- பச்சை மிளகாய் – 3
- வெங்காயம் – 2
- வேகவைத்த கோழிக்கறி
- 250 கிராம் காய்ந்த மிளகாய்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு -1/2 டீஸ்பூன்
செய்முறை
ஆந்திரா ஸ்பெஷல் கோங்குரா சிக்கன் குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்..
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும். பின் புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .
.பிறகு கோழிக்கறியை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சூடு தண்ணீரில் இட்டு வேக வைக்கவேண்டும்
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும் . அடுத்து அதில் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்
.பின்னர் வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.பிறகு புளிச்சக்கீரை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவேண்டும் . பின் அதில் வேகவைத்த சிக்கனை இட்டு மிளகாய்த்தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவேண்டும். பின்பு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து திக்கான பதம் வரும் போது இறக்கி பரிமாறவும்.