
சமைக்க தேவையானவை
- மீன் – அரை கிலோ
- கடுகு – 1 ஸ்பூன்
- வெந்தயம் – கால் ஸ்பூன்
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- மல்லி தூள் – 2 ஸ்பூன்
- தக்காளி – 1
- காஷ்மீரி மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
- பெருங்காயம் – கால் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
- எண்ணெய் -அரை கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மீனை நன்கு கழவி சுத்தம் செய்து கொள்ளவும்.ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம் போட்டு தாளிக்கவும். அதனுடன் சிறிது பெருங்காயம் சேர்க்கவும். தக்காளியை மசித்து அதனு்டன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள மீன் துண்டுகளை மசாலா கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
அதன் பின்னர் தேவையான அளவு புளி தண்ணீரை சேர்த்து 20 நிமிடம் கொதிக்க விடவும். வெந்த பின் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கவும். பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
1
+1
+1
+1