
சமைக்க தேவையானவை
- துவரம் பருப்பு -2 ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- மஞ்சள் பொடி – சிறிதளவு
- கடலை பருப்பு -2 ஸ்பூன்
- புளி – சிறிதளவு
- பூண்டு – 20 பல்
- இஞ்சி – 25 கிராம்
- வறுத்து பொடித்த வெந்தயம் – 1 ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
- சாம்பார் பொடி -2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 3
- உப்பு – தேவையான அளவு
- புளி – சிறிதளவு
செய்முறை
முதலில் தோல் நீக்கிய இஞ்சி ,வெங்காயம்,பூண்டு ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். பின் கடாயில் நல்லெண்ணைய் விட்டு, கடலை பருப்பு, கடுகு, கறிவேப்பிலை,துவரம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். 1 டம்ளர் தண்ணீர் விடவும்.
சாம்பார் பொடி, பெருங்காய பொடி ,புளி கரைத்த தண்ணீர், வறுத்த வெந்தய பொடிஎல்லாம் சேர்க்கவும். நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1