
சமைக்க தேவையானவை
- பாசிப்பருப்பு – அரை கப்
- உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
- வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- கடுகு – கால் டீஸ்பூன்
அரைக்க
- உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
- சீரகம் அ- ரை டீஸ்பூன்
- பொட்டுக்கடலை – 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை
முதலில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளியை பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவேண்டும்.
பின் வெறும் கடாயில் மிதமான தீயில், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, ஆறிய பின் அரைக்கவேண்டும்.
பிறகு அரைத்த விழுதை, பருப்புக் கலவையுடன் சேர்த்துக் கலந்து நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து.
ஒரு கொதி வந்ததும் இறக்கவும். வெறும் கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1