
சமைக்க தேவையானவை
- இறால் – 1/4 கிலோ
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- சாம்பார் வெங்காயம், தக்காளி – 100 கிராம்
- எண்ணெய் – 1/4 குழிக்கரண்டி
- பூண்டு – 5 பல்
- தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
- சோம்பு – சிறிதளவு
- கசகசா – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
- தேங்காய் – 1/4 மூடி
- இஞ்சி – சிறு துண்டு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
தேங்காய், இஞ்சி, பூண்டு, கசகசாவை அரைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயத்தை வதக்கவும். வதக்கிய வெங்காயத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து மசாலா முறிந்ததும் இறாலைப் போட்டு வெந்ததும் இறக்கிவிடவும்.பின்பு பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1