
சமைக்க தேவையானவை
- இறால் – 100 கிராம்
- இஞ்சி – சிறு துண்டு
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
- தனி மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
- உப்பு – அரை தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- கொத்தமல்லி – ஒரு கொத்து
- தேங்காய் துருவல் – கால் கப்
- சோம்பு – அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
செய்முறை
முதலில் இறாலை தோல் உரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காய், சோம்பு இரண்டையும் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பிறகு அதனுடன் இறாலை போட்டு ஒரு நிமிடம் வதக்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு 3 நிமிடம் பிரட்டி விடவும். அதில் அரைத்த தேங்காய் சோம்பு விழுது போட்டு நன்கு பிரட்டி விடவும். 4 நிமிடம் கழித்து மேலே கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விடவும். பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செய்யலாம்.பின்பு பரிமாறவும்.
வீடியோ இணைப்பு
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1