
சமைக்க தேவையானவை
- கருப்பரிசி – ஒரு கப்
- வெல்லம் – ஒரு கப்
- நெய் -2 டேபிள்ஸ்பூன்
- பால் – 1/4 கப்
- முந்திரி – 10
- பச்சைப் பருப்பு – 1/4 கப்
- ஏலக்காய் – 1
- தேங்காய்ப் பூ – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும். பருப்புடன் கருப்பரிசியை சேர்த்துக் கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும். நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி,வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டிவிட்டு,பிறகு மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.
பிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.அடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக்கொடுத்து இறக்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.பரிமாறவும்.