
சமைக்க தேவையானவை
- மீன்- அரை கிலோ
- மிளகு- 1 ஸ்பூன்
- புளி-எலுமிச்சை பழ அளவு
- மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
- தக்காளி நறுக்கியது – 3
- பூண்டு – 10 பல்
- மல்லி இலை – சிறிதளவு
- நல்லெண்ணெய்-1குழிக்கரண்டி அளவு
- நறுக்கிய வெங்காயம் – 2
- கடுகு- 1 ஸ்பூன்
- தனியாத்தூள்- 3 ஸ்பூன்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய்-4
- சீரகம்-1ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தேங்காய் – அரை மூடி
- கறிவேப்பிலை-தேவையான அளவு
செய்முறை
மீன் குழம்பில் மிக மிக ருசியானது காரைக்குடி மீன் குழம்பு. இந்த பகுதியில் சமைக்கப்படும் மீன் குழம்பின் சுவையே தான். நீங்கள் ஒரு முறை செய்து பாருங்கள். அதன் ருசியை அறிவீர்கள். வாங்க சமைக்கப் போகலாம்.
முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு புளியை தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதன் பின் பூண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பச்சை மிளகாய் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது தேவைாயான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
குழம்பு ஒரளவு கெட்டியானவுடன் மீன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு மல்லி இலை கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.பின்பு பரிமாறவும்.