
சமைக்க தேவையானவை
- குடவாழை அரிசி – கால் கிலோ
- கரும்பு வெல்லம் – 200 கிராம்
- பச்சை பயிறு – 100 கிராம்
- மாதுளம் பழம் முத்துக்கள் – 100 கிராம்
செய்முறை
கரும்பு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும். குடவாழை அரிசியை 16 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பச்சை பயிரை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பச்சைப் பயிறு, குடவாழை அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
அதனுடன் பொடித்த கரும்பு வெள்ளத்தை சேர்த்து குக்கரை மூடி ஐந்து விசில் வந்தவுடன் இறக்கவும்.
விசில் போனவுடன் மூடியை திறந்து மாதுளம் பழம் முத்துக்களை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும். சூடான சுவையான குடவாழை அரிசி பொங்கல் ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1