
சமைக்க தேவையானவை
தேங்காய்ப் பால் – முக்கால் கப்
நறுக்கிய வெங்காயம்
கொண்டைக்கடலை – 200 கிராம்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
தக்காளி – தலா 2
மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை ஊற வைத்துக் கழுவி, வேக வைத்து தனியே எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம் தாளித்து, தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பச்சை வாசனை போனதும், சாட் மசாலாத்தூளை சேர்த்து நன்கு கலந்து, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கொதிக்க விடவும்.
நல்ல வாசனை வந்ததும், வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து, லேசாகக் கொதிக்க வைத்து இறக்கவும். இந்த உணவினை இரவு நேரத்தில் சாப்பிட ஏற்றது. சாப்பாட்டின்போது கூட்டாகவும் இதனை வைத்து சாப்பிடலாம். சப்பாத்தி மற்றும் பூரிக்கு மிகவும் சுவையாக இருக்கும்.