
சமைக்க தேவையானவை
- பரோட்டா-2
- முட்டை-1
- வெங்காயம்-2
- எண்ணெய் -4 ஸ்பூன்
- தக்காளி-1
- பச்சை மிளகாய் -2
- உப்பு-தேவையான அளவு
- பூண்டு-8 பல்
- கறிவேப்பிலை-ஒரு கொத்து
- கொத்தமல்லி-தேவையான அளவு
- இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
- கரம் மசாலா தூள்- 1 ஸ்பூன்
- தனி மிளகாய் தூள்-1 ஸ்பூன்
செய்முறை
முதலில் பரோட்டாவை செய்து வைத்து கொள்ளவேண்டும். பிறகு அதை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்கு வதக்கவும்.
நன்றாக வதக்கிய பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும். தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும். அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.
10 நிமிடம் கழித்து வாசனைக்காக கொத்தமல்லி சிறுது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சுட சுட சுவையான கொத்து பரோட்டா தயார். இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1