
சமைக்க தேவையானவை
- பாசுமதி அரிசி – ஒரு கப்
- கோவைக்காய் – 200 கிராம்
- கரம் மசாலாத்தூள் – ஒரு ஸ்பூன்
- மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
- தேங்காய்த் துருவல் – 2 ஸ்பூன்
- கொத்தமல்லித்தழை – சிறிதளவு
- கடுகு – 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- வறுத்த முந்திரி – சிறிதளவு
- எண்ணெய், நெய் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
கோவைக்காயை நீளவாக்கில் வெட்டிகொள்ளவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசுமதி அரிசியை 20 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் கோவைக்காய், தேங்காய்த் துருவல், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு அதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும். விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1