
சமைக்க தேவையானவை
- கேரட் – 3 (பொடியாக நறுக்கியது)
- பால் – 1/4 கப்
- தண்ணீர் – 1 கப் + 1/2 கப்
- கேரட்டை வேக வைப்பதற்கு
- பூண்டு – 5 பல்
- பட்டை – 1
- கிராம்பு – 2
- பிரியாணி இலை – 1
- மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1 சிட்டிகை
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- வெண்ணெய் – 1 டீஸ்பூன்
- க்ரீம் – 2 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அதில் கேரட், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்பு அதில் கேரட் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, கேரட்டை நன்கு மென்மையாக வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும். பிறகு அதில் உள்ள பிரியாணி இலை, பட்டை, கிராம்பை எடுத்து விட்டு, மிக்ஸர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், அரைத்த கேரட் பேஸ்ட் மற்றும் நீர் ஊற்றி நன்கு கட்டி இல்லாமல் கிளறி விடுங்கள். சூப் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பால், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் க்ரீம் சேர்த்தால், க்ரீமி கேரட் சூப் தயார்.