
சமைக்க தேவையானவை
- சம்பா ரவை – 1/2 கப்பச்சை பட்டாணி – 1/2 கப்
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- கேரட் – 1 (நறுக்கியது)
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – 1/2 டீஸ்பூன் (துருவியது)
- கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
- தண்ணீர் – 3 கப்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சம்பா ரவையை நீரில் அலசி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக வைக்க வேண்டும். பின்னர் 2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் ரவையைப் போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அதனைஇறக்கி, நீரை வடிகட்டி வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு துருவிய இஞ்சியை சேர்த்து கிளறி, பச்சை பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து, பிரட்டி 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பிறகு அத்துடன் சம்பா ரவையை சேர்த்து, 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, 2 விசில் விட்டு, இறக்க வேண்டும். பின் குக்கரை திறந்து, அதன் மேல் கொத்தமல்லியை சேர்த்து அலங்கரித்து.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1