
சமைக்க தேவையானவை
- நாட்டுக்கோழி – 100 கிராம்
- வேக வைத்த சாதம் இரண்டு கப்
- சின்ன வெங்காயம் – 5
- தக்காளி – ஒன்று
- மிளகு – ஒரு டீஸ்பூன்
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- சோம்பு – ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய கொத்த மல்லித்தழை – அரைக்கால் கப்
- கறிவேப்பிலை – 4 அல்லது 5 இலைகள்
- பூண்டுப் பல் – ஒன்று
- நெய் (அ) நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரைக்கால் டீஸ்பூன்
- கொத்த மல்லித்தழை (அலங்கரிக்க) – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். நாட்டுக் கோழியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு ஆகிய வற்றைத் தட்டி வைத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் (அ) நல்லெண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் குக்கரைத் திறந்து சூப்பை மட்டும் வடிகட்டி அதைச் சூடான சாதத்துடன் தேவையான அளவு சேர்த்து நன்றாகக் கிளறவும். ரசம் சாதம் போல இருக்க வேண்டும். ருசி பார்த்து, தேவையானால் சிறிது உப்பு சேர்க்கவும்.