
சமைக்க தேவையானவை
- பூண்டு – அரை கப்
- வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
- வரமிளகாய் – 1
- கறிவேப்பிலை – சிறிது
- சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
- சின்ன வெங்காயம் – 50 கிராம்
- தக்காளி – 1
- கடுகு – 1/2 டீஸ்பூன் புளி – 1 எலுமிச்சை அளவு
- எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- வறுத்து அரைப்பதற்கு
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- மிளகு – 1/2 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 3
- மல்லி – 1/2 டீஸ்பூன்
- பூண்டு – 5 பற்கள்
- வரமிளகாய் – 1
- தக்காளி – ½
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும் .பின் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக வைக்கவும். பின் புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்னர் வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விடவேண்டும் .
பின்னர் குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். பின்பு அதில் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால். சின்ன வெங்காய குழம்பு ரெடி.