
சமைக்க தேவையானவை
- கோழிக்கறி – 1 கிலோ
- தக்காளி – 4
- பூண்டு – 17 பல்
- எண்ணெய் அரை கப்
- மல்லி தூள் – 2 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
- சிக்கன் மசாலா -2ஸ்பூன்
- பெரிய வெங்காயம் -கால் கிலோ
- கொத்தமல்லித் தழை சிறிதளவு
- மிளகு தூள் – 1 ஸ்பூன்
- இஞ்சி சிறுதுண்டு
- மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
- தாளிக்க
- பட்டை – சிறு துண்டு
- சோம்பு – சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- ஏலக்காய் – 3
செய்முறை
சில்லி சிக்கன் மசாலா செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்
முதலில் கோழியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும்
இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் அரைக்க வேண்டும் . ஒரு கடாயி்ல் எண்ணெய் விட்டு காய்ந்ததும் , கிராம்பு, பட்டை, , சோம்பு போட்டு தாளித்து நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் அரைத்த இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
நன்கு வதங்கியவுடன் மசாலா தூள் அனைத்தையும் போட்டு வதக்கி நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் சிக்கன் உப்பு சேர்த்து நன்கு கிளரி 3 டம்ளர் தண்ணீர் விட்டுமிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும். கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.