
சமைக்க தேவையானவை
- புளி – 1 சிறு எலுமிச்சை அளவு
- சின்ன வெங்காயம் – 20 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 4 (நீளமாக கீறியது)
- பூண்டு – 5 பல் (நீளமாக கீறியது)
- காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகத் தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- நல்லெண்ணெய் – 1 /2 கப்
- தண்ணீர் – 1 கப்
- நெத்திலி கருவாடு – 2 பாக்கெட்
செய்முறை
முதலில் கருவாட்டை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை நீரில் ஒரு 10 நிமிடம் ஊற வைத்து, நன்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த புளி நீரில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றைப் போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் தூவி ஒரு கப் நீர் ஊற்றி, கையால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
பிறகு அதை அடுப்பில் வைத்து, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அதில் நல்லெண்ணெயை ஊற்றி, 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். குழம்பானது ஓரளவு கெட்டியானதும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து கிளறி, ஒரு 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கினால், சுவையான சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு தயார்.
குறிப்பு: கருவாட்டு குழம்பை தயாரித்த, ஒரு மணிநேரம் கழித்து சாப்பிட்டால் தான் அதன் சுவை நன்றாக இருக்கும்.