
சமைக்க தேவையானவை
- கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 150 கிராம்
- பூண்டு பற்கள் – 10
- வெந்தயம், மிளகு, கடுகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
- புளி – எலுமிச்சை அளவு
- சுக்கு மல்லி பொடி – ஒன்றரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
- மிளகாய்த்தூள் – தேவையான அளவு
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 3 குழிக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், பூண்டை தோல் நீக்கி வைக்கவேண்டும். பின் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 ஸபூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து ஆறியதும், மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
பின் புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் மீதமுள்ள நல்லெண்ணெயை கடாயில் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவேண்டும்.
இரண்டும் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவேண்டும் .பொடித்து வைத்த பொடியையும், சுக்கு மல்லி பொடியை, உப்பு சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
பின்னர் குழம்பு பக்குவம் வந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சுவையான சுக்கு மல்லி குழம்பு ரெடி.