
சமைக்க தேவையானவை
- பச்சை சுண்டைக்காய் – 1 கப்
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
- தனியா – 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
- தாளிக்க கடுகு – சிறிது
- பூண்டு – 15 பற்கள்
- புளி – ஒரு எலுமிச்சைப்பழ அளவு
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் பச்சை சுண்டைக்காயை சுத்தம் செய்து காம்பைக் கிள்ளி வைக்கவேண்டும். பிறகு புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.பின்பு கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம், பூண்டு 5 பற்கள் போட்டு வறுத்துக் கொள்ளவேண்டும்.
ஆறிய பின் நைசாக, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பின்னர் கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் தாளித்து, பச்சைச் சுண்டைக்காய்களைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாக் கலவை ஊற்றி கலக்கவும்.
சுண்டைக்காயோடு மசாலா நன்கு கலந்து வந்ததும் புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விடவும். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1