
சமைக்க தேவையானவை
- பாசி பயறு – 1/4 கப்
- பச்சை பயறு – 1/4 கப்
- கடலை பருப்பு – 1/4 கப்
- கொண்டைக்கடலை – 1/4 கப்
- துவரம் பருப்பு – 1/4 கப்
- உளுத்தம் பருப்பு – 1/4 கப்
- மைசூர் பருப்பு – 1/4 கப்
- கருப்பு சுண்டல் – 1/4 கப்
- அரிசி – 2 கப்
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
- வரமிளகாய் – 2
- கறிவேப்பலை – சிறிது
- சுரைக்காய் – 4 கப் (துருவியது)
- மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- எண்ணெய் – தோசை சுடுவதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் அனைத்து பருப்புக்கள் மற்றும் அரிசியை நீரில் குறைந்தது 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் அதை நன்கு கழுவி, மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பெருங்காயத் தூள், வர மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் துருவிய சுரைக்காயை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி இறக்கி, அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதோடு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். இப்போது அடை மாவு தயார். அதன் பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும் அடை மாவு கொண்டு தோசை சுட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும், பின்னும் நன்கு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் அடை தோசை ரெடி! இந்த அடை தோசைக்கு தேங்காய் சட்னி பிரமாதமாக இருக்கும்.