
சமைக்க தேவையானவை
- ஆட்டுக்கால் – 1 செட் (4 கால்)
- மிளகு – 2- 3 டீஸ்பூன்
- மல்லி – 2 டீஸ்பூன்
- சீரகம் – 2 டீஸ்பூன்
- பூண்டு – 6 பல்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- தக்காளி – 1 (விரும்பினால்)
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
- மல்லி இலை – சிறிது
- கறிவேப்பிலை – 2 இணுக்கு
செய்முறை
முதலில் கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கவும். ஐந்து வெங்காயம் மட்டும் கட் செய்து வைக்கவும். மீதியை அரைக்க முழுதாக வைக்கவும். மிளகு, சீரகம், மல்லி லேசாக வெதுப்பிக்கொள்ளவும். மிக்ஸியில் மூன்றையும் போட்டு, வெங்காயம், பூண்டு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
குக்கரில் ஒரு லிட்டர் அளவுக்கு (கால் மூழ்கும் அளவுக்கு சிறிது கூட) தண்ணீர் வைத்து உப்பு போடாமல், அரைத்த மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். இரண்டு விசில் வந்தவுடன் அரைமணி நேரம் சிம்மில் வைத்து இறக்கவும். ஆவி அடங்கியவுடன் திறக்கவும். உப்பு சேர்க்கவும்.
பிறகு 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்றலாம். மல்லி இலை தூவவும். சுவையான, சத்தான ஆட்டுக்கால் சூப் ரெடி. இதனை அப்படியே பவுளில் ஸ்பூன் போட்டு பரிமாறலாம்.
ஆட்டுக்கால் எல்லா இடங்களிலும் சுத்தம் செய்து கிடைக்காது. எனவே சுத்தம் செய்ய ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு சிறிய பாக்கெட் சுண்ணாம்பு போடவும், அதில் ஆட்டுக்காலை போடவும், ஐந்து நிமிடம் கழித்து எடுக்கவும்.