
சமைக்க தேவையானவை
- பாலடை – கால் கப்
- இஞ்சி – ஒரு சிறிய துண்டு
- கசகசா – அரை டீஸ்பூன்
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – கால் கப்
- கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
- சோயா சங்ஸ், சின்ன வெங்காயம் – தலா 10
- நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாலடையை அளவான நீர் விட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். மிக்ஸியில் சின்னவெங்காயம், இஞ்சி, தேங்காய்த்துருவல், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கசகசாவைச் சேர்த்து கெட்டியாக கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்பு சோயா சங்ஸை 10 நிமிடம் நீரில் ஊற வைத்து எடுத்த நீரை பிழிந்து வடித்துக் கொள்ளவும். வேகவைத்தப் பாலடை, அரைத்த விழுது, சோயா சங்ஸ் இவை மூன்றையும் நன்கு கலந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகுத்தூளைத் தூவி கலந்த மசாலாவைச் சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு கேரட் துருவல், கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.பரிமாறவும்
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
1
+1
+1
+1