
சமைக்க தேவையானவை
- பூண்டு – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
- கொத்தமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- பொட்டுக்கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- மீல் மேக்கரை வேக வைப்பதற்கு…
- பால் – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- மீல் மேக்கருடன் அரைப்பதற்கு…
- சோம்பு – 3/4 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கசகசா – 3/4 டீஸ்பூன்
- பட்டை – 1/4 இன்ச்
- கிராம்பு – 1
செய்முறை
முதலில் பாத்திரத்தில் பால் மற்றும் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் மீல் மேக்கரைப் போட்டு 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கி, 15 நிமிடம் அப்படியே ஊற வைத்து, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசிக் கொள்ளவும்.
பின் மீல் மேக்கரில் உள்ள நீரை கையால் பிழிந்து கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜாரில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் சோம்பு, பச்சை மிளகாய், கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், தீயை குறைத்துவிட்டு, உருட்டிய உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சோயா கீமா கோலா உருண்டை தயார்.