
சமைக்க தேவையானவை
- புழுங்கல் அரிசி – ஒன்றரை கப்
- ஜவ்வரிசி – ஒரு கப்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 5 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரை நன்கு வடிகட்டி இரண்டரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். அப்போது அதனைக் கிளறினால்தான் முழுமையாக ஊறும். புழுங்கல் அரிசியை இரண்டரை மணி நேரம் ஊற வைத்து, அதனை நன்கு கழுவி அரைத்துவைக்கவும்.
பிறகு அரிசி நன்கு அரைபட்டவுடன், ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்துவைத்து கொள்ளவும். பிறகு அரிசி நன்கு அரைபட்டவுடன், ஜவ்வரிசி, உப்பு சேர்த்து நைஸாக அரைத்துவைத்து கொள்ளவும்.
மாவை இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், , இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் கொட்டிக் கலக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் தேய்த்து, கனமான தோசையாக ஊற்றவும். இருபுறமும் எண்ணெய் விட்டு தோசை வெந்ததும் எடுக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
1
+1
+1