
சமைக்க தேவையானவை
- திருக்கை மீன் – 250 கிராம்
- தேங்காய் எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
- வெங்காயம் – 1 பெரியது(மெல்லியதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 3 நீளமாக நறுக்கியது
- பூண்டு – 4 பற்கள்(மெல்லியதாக நறுக்கியது)
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- தேங்காய்பால் – 1.5 கப்
- இஞ்சி – 2துண்டு(மெல்லியதாக நறுக்கியது)
- கெட்டித்தேங்காய் பால் – 1 கப்
- தக்காளி – 1நடுத்தர அளவு(நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மஞ்சள் தூளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்நீர் சேர்த்து கலக்கி தனியே வைக்கவும்திருக்கை மீனை மேல் தோல் நீக்கி நன்கு சத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
சிறிதளவு உப்பு சேர்க்கவும். பின்பு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள் கலந்த நீரை சேர்க்கவும். பின்பு மீன் துண்டுகள் சேர்க்கவும். மீனின் இருபுறமும் படும்படி பிரட்டி எடுக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் தனியே வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில்சிறிது நேரம் வதக்கவும் . மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும். பின்பு வெங்காயம் கறி வேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும் வெங்காயம் மெல்லியதாகும் வரை வதக்கவும். பின்பு தேங்காய் பால் சேர்க்கவும்.
நன்கு கலக்கவும். கொதிக்க தொடங்கியதும் மீன் துண்டுகளை போடவும். நன்கு கலக்கி வேக வைக்கவும்பின்பு கெட்டித் தேங்காய் பால் சேர்க்கவும்பின்பு தக்காளி சேர்த்து சிம்மில் வேக வைக்கவும்பின்பு 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு பரிமாறவும்.
வீடியோ இணைப்பு