
சமைக்க தேவையானவை
- நற்பதமான துருவிய தேங்காய் – 1 கப்
- கொதிக்க வைத்து குளிர வைத்த பால் – 1 1/4 கப்
- சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
- நெய் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாவ வதக்கவும்.
அதன் பிறகு கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும். பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும். கலவையானது கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள்.
பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மீண்டும் கிளறும் போது, அல்வா போன்று எதிலும் ஒட்டாமல் வரும். அப்போது முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.
குறிப்பு: மற்ற அல்வாக்களைப் போல் இந்த அல்வாவிற்கு அதிக நெய் தேவைப்படாது. மேலே குறிப்பிட்டுள்ளதை விட குறைவாக 2 டேபிள் ஸ்பூன் மட்டும் பயன்படுத்தினாலே போதும். தேங்காயை துருவ முடியாவிட்டாலும் பரவாயில்லை.
தேங்காயை துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்தும் பயன்படுத்தலாம். நற்பதமான தேங்காயை மட்டும் பயன்படுத்துங்கள். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு தேவையான இனிப்பு சுவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.