
சமைக்க தேவையானவை
- அரிசி மாவு – 2 கப்
- பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
- கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப
- அரைப்பதற்கு
- துருவிய தேங்காய் – 1 கப்
- வரமிளகாய் – 2
- மல்லி விதைகள் – 2 டீபூன்
- ஓமம் – 1/4 டீபூன்
- எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் மிக்சர் ஜாரில் மல்லி விதைகள், ஓமம், வரமிளகாய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். * பின்பு ஒரு பெரிய பௌலில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை ஒரு 10 நிமிடம் ஊற வைக்கவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளங்கையில் எண்ணெய் தடவி, அந்த உருண்டையை தட்டையாக தட்டி, எண்ணெய் போட்டு பொன்னிறிமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், தேங்காய் தட்டை தயார்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1