
சமைக்க தேவையானவை
- தேங்காய் – 1
- கேரட் – 150 கிராம்
- உருளை – 200 கிராம்
- பீன்ஸ் – 75 கிராம்
- பச்சைமிளகாய் – 3
- இஞ்சி – சிறிய துண்டு
- பட்டை, கிராம்பு கசகசா
- வெங்காயம் – 100 கிராம்
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- மிளகு – 1 டீஸ்பூன்
- ஏலக்காய் – தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கேரட், பீன்ஸை சிறிதாக வெட்டி வேகவைத்து அரைவேக்காடு அளவில் எடுங்கள். தேங்காயை துருவி 2 தரத்தில் பால் எடுத்துக் கொள்ளவேண்டும் . இஞ்சியைச் சிறிதாகவும், வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெட்டிக்கொள்ளுங்கள்.
பட்டை, மிளகு, கிராம்பு, கசகசா, ஜாதிக்காய், ஏலக்காயை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்க வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, அதில் வேக வைத்த காய்கறிகளைக் கொட்டி, உப்புப் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும்.
தண்ணீர் வற்றியதும், இரண்டாம் பாலை ஊற்றி அரைத்த பேஸ்ட் போட்டு, ஒரு கொதி வந்ததும், முதல் பாலை ஊற்றி இறக்குங்கள். சொதி ரெடி!
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1