
சமைக்க தேவையானவை
- மைதா மாவு-3/4 கப்
- ரவை மாவு-2 கப்
- எண்ணெய்-1/2 கப்
- நெய்-1/4 கப்
- தண்ணீர்-தேவையான அளவு
- ஏலக்காய் தூள்-தேவையான அளவு
- சர்க்கரை-1கப்
- தேங்காய்-1கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் அதனுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு செய்வது போல பிசைந்து கொள்ளவேண்டும். பிறகு அதனை 2 முதல் 3 மணி நேரம் ஒரு துணியினால் மூடி வைக்க வேண்டும். ஓரு கிண்ணத்தில் அரைத்த தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
முன் பிசைந்து வைத்த மாவினை உருண்டையாக உருட்டி எடுத்து அதன் நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து தட்டையாக தேய்த்து கொள்ள வேண்டும். மாவினில் இரண்டு பக்கமும் எண்ணெய் தடவவும். பிறகு, அடுப்பில் தவாவை மிதமான சூட்டில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை வேக வைக்கவும். கடைசியில் சிறிது நெய் சேர்த்து சூடாக பறிமாறுங்கள். சூடான, சுவையான, இனிப்பான, தேங்காய் சர்க்கரை போளி ரெடி.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1