
சமைக்க தேவையானவை
- பாஸ்மதி அரிசி – அரை கிலோ
- இறால் – 300 கிராம்
- புதினா – ஒரு கொத்து
- எலுமிச்சை – ஒன்று
- பட்டை ,ஏலக்காய் ,கிராம்பு – தலா இரண்டு
- மல்லித்தளை – கால்கட்டு
- தக்காளி – 4
- பச்சை மிளகாய் – 5
- வெங்காயம் – 4
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 150 கிராம்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் எண்ணெயை காய வைத்து பட்டை,கிரம்பு ,ஏலம் மற்றும் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும். பிறகு கொத்து மல்லி புதினா, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு இரண்டு நிமிடம் சிம்மில் விட்டு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேகவிடவேண்டும்.
தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேகவிடவும். இப்போது அரிசியை முக்கால் வேக்காடில் வேக விட்டு அதில் அரை தேக்கரண்டி எண்ணை,எலுமிச்சை சாறு சேர்த்து உடனே தாளித்து வைத்துள்ள கூட்டில் கொட்டவேண்டும்.
கொட்டி தம்மில் விடவேண்டும் தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும்.
சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவினால் போல ஊற்றி நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் ஐந்து நிமிடம் சென்ற பின் இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான நாஞ்சில் இறால் பிரியாணி தயார்.