
சமைக்க தேவையானவை
- துவரம்பருப்பு – அரை கப்
- காய்ந்த மிளகாய் – 2
- சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள், கடுகு, மஞ்சள் தூள் – தலா கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
- புளி – 50 கிராம்
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பக்கோடாவுக்கு
- காய்ந்த மிளகாய் – 4
- கடலைப்பருப்பு – ஒரு கப்
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை
முதலில் பக்கோடாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை ஒன்றாகச் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும் .பின்பு கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுத்துக் கொள்ளவேண்டும்.
பின்னர் குக்கரில் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து அதில் புளிக் கரைசல், சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும்.
பின்னர் வேக வைத்த துவரம்பருப்பு, நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் போட்டு நன்கு கொதித்ததும் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1