
சமைக்க தேவையானவை
- பனீர் (பெரிய துண்டுகள்) – 1/2 கப்
- எண்ணெய் – 5 டீஸ்பூன்
- பாசுமதி அரிசி – 1 கப்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- பட்டை, சோம்பு, கசகசா, கிராம்பு எல்லாம் சேர்த்து – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2, புதினா
- கொத்தமல்லி – 1/2 கப்
- தயிர் – 1 டீஸ்பூன்
- நெய் – 2 டீஸ்பூன்
- துண்டுகளாக்கிய முந்திரி – 10
- தேங்காய்த் துருவல் – 6 டீஸ்பூன்
- தக்காளி – 1
செய்முறை
முதலில் வெறும் கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக் கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும். குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு 2 கப் நீர் விட்டு, உப்பு, தயிர் சேர்த்து வறுத்த பொருட்களையும், அரைத்த பொருட்களையும் போட்டுக் கொதிக்க விட வும்.
கடாயில் எண்ணெய் விட்டு பனீர், இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி, அரிசிக் கலவையில் சேர்த்து பிறகு வெயிட் போடவும். முதலிலேயே போட் டால் பனீர் கரைந்துவிடும். ஆவி வெளியேறியதும் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறவும். நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்துச் சேர்க்கவும். சூடான பனீர் பிரியாணி தயார். முழு பனீர் சுவை வேண்டுமெனில், பனீர் பிரியாணிக்கு காய்கறிகள் எதுவும் சேர்க்கக் கூடாது.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1