
சமைக்க தேவையானவை
- எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
- பன்னீர் – 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
- குடைமிளகாய் சாம்பார்குடைமிளகாய் சாம்பார்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
- தக்காளி – 2 (நறுக்கியது)
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- சர்க்கரை – 1 டீஸ்பூன்
- பால் – 1 கப்
- சோள மாவு – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாலில் சோள மாவை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே பேனில் சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின் தக்காளியை சேர்த்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கிளறி, சிறிது நீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் அளவு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து, சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். இப்போது சோள மாவு கலந்த பால் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், பன்னீர் மில்க் கிரேவி தயார்.