
சமைக்க தேவையானவை
துவரம்பருப்பு – கால் கப்
பச்சரிசி – கால் கப்
சோம்பு – ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம் – அரை கப்
பச்சை மிளகாய் -3
இஞ்சி – ஒரு துண்டு
தேங்காய் துருவல் – அரை கப்
மல்லித் தழை – ஒரு பிடி
எலுமிச்சம்பழச் சாறு – 2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – முக்கால் கப்
பாசிப்பருப்பு – கால் கப்
கறிவேப்பில – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக உப்பு சேர்த்து ஊறவையுங்கள். அவற்றை , கெட்டியாக அரைத்தெடுங்கள் .அரைத்த விழுதுடன் தேங்காய் துருவல் விழுதுடன் நறுக்கிய வெங்காயம் சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி,பின் அதனை ஆவியில் வேகவைத்து எடுங்கள். காரச் சட்னியுடன் பரிமாறுங்கள். அல்லது இதை புளி குழம்பிலும் போடலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1