
சமைக்க தேவையானவை
- கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (நறுக்கியது)
- மஞ்சள் தூள் – 3/4 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
- கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
- உப்பு – சுவைக்கேற்ப தாளிப்பதற்கு
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- கறிவேப்பிலை – சிறிது
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாக வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து பச்சை வாசனைப் போக வதக்கவும். பின்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒருமுறை கிளறி, பின் கடவை மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
பிறகு 1 கப் நீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், குறைவான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும். கிரேவி சற்று கெட்டியாகி பச்சை வாசனை போனதும், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாம்பே சட்னி தயார் குறிப்பு: உங்களுக்கு சட்னி சற்று புளிப்பாக வேண்டுமானால், அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1