
சமைக்க தேவையானவை
- மட்டன் – 250 கிராம்
- கடுகு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் – 1
- பட்டை – 1 துண்டு
- கிராம்பு – 2
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- தயிர் – 1/2 கப்
- கொத்தமல்லி – சிறிது
செய்முறை
முதலில் மட்டனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி ஆடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும். பிறகு அதில் தயிர் சேர்த்து பிரட்டி, ஒரு கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும். ஒருவேளை மட்டன் வேகாமல் இருந்தால், மீண்டும் மூடி 2 விசில் சிட்டு இறக்க வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து மட்டனை கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேல் கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பெங்காலி ஸ்டைல் மட்டன் கறி தயார்.