
சமைக்க தேவையானவை
- பாசுமதி அரிசி – 2 கப்
- தேங்காய் எண்ணெய் – 1/4 கப்
- பிரியாணி இலை – 1
- ஏலக்காய் – 5
- கிராம்பு – 5
- பட்டை – 1 சிறு துண்டு
- சீரகம் – 1 டீஸ்பூன்
- அன்னாசிப்பூ – 1
- கல்பாசி – 2 துண்டு
- வெங்காயம் – 3 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 6-7 (நீளமாக கீறிக் கொள்ளவும்)
- தண்ணீர் – 2-3 கப்
- நெய் – 1/4 கப்
- முந்திரி – ஒரு கையளவு
- உலர் திராட்சை – சிறிது
- ஊற வைப்பதற்கு
- மட்டன் – 1/2 கிலோ
- தயிர் – 1/2 கப்
- உப்பு – சுவைக்கேற்ப
- புதினா இலைகள் – 1 கப்
- எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்து நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு பிரட்டி, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கல்பாசி, அன்னாசிப்பூ, சீரகம், சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் மட்டனை சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். பின்பு குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்கவும். இப்போது குக்கரில் ஒரு கப் அளவு நீர் இருக்கும். அத்துடன் 3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க விடவும்.
நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், ஒரு 5 நிமிடம் உயர் வெப்பநிலையில் நன்கு நீரைக் கொதிக்க விடவும். பின் தீயைக் குறைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதை குக்கரில் ஊற்றி, குக்கரை மூடி, குறைவான தீயில் பத்து நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மட்டன் நெய் சோறு தயார்.