
சமைக்க தேவையானவை
- மட்டன் – 1/2 கிலோ
- எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
- சோம்பு – 2 டீஸ்பூன்
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- கறிவேப்பிலை – சிறிது
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 2 (நறுக்கியது)
- தண்ணீர் – 1/2 கப்
- ஊற வைப்பதற்கு
- தயிர் – 1/2 கப்
- மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- சரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
- மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் மட்டனை நன்கு நீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை கழுவிய மட்டனுடன் சேர்த்து பிரட்டி 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் தக்காளி சேர்த்து பிரட்டி விட வேண்டும். தக்காளி நன்கு மென்மையானதும், அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை அதிகரித்து குக்கரை மூடி 7-8 விசில் விட்டு, பின் தீயை குறைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1