
சமைக்க தேவையானவை
- மட்டன் – 200 கிராம்
- துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித் தூள் – 1 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
- உப்பு – சுவைக்கேற்ப
- அரைப்பதற்கு
- தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- மிளகு – 1/4 டீஸ்பூன்
- தாளிப்பதற்கு
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- பட்டை – 1/4 இன்ச்
- கல்பாசி 1/4 டீஸ்பூன்
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- பிரியாணி இலை – 1
செய்முறை
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் போல் மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் துவரம் பருப்பை நீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி சேர்த்து 2 நிமிடம், தக்காளி நன்கு மென்மையாகி பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் மட்டனை சேர்த்து 2 நிமிடம் கிளறி, மட்டனின் நிறம் மாற ஆரம்பித்ததும், அதில் துவரம் பருப்பை கழுவி சேர்த்து கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும். மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, கிரேவி கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காயை ஊற்றி, மீண்டும் 3-4நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா ரெடி.