
சமைக்க தேவையானவை
- புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
- சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
- மிளகு – 2 ஸ்பூன்
- முழுப்பூண்டு – 1
- நல்லெண்ணை – 4 ஸ்பூன்
- சீரகம் – 1 ஸ்பூன்
- கடுகு ,கறிவேப்பிலை – சிறிது
- சாம்பார் வெங்காயம் -10
- உப்பு – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் புளியை ஊறவைத்து, கரைத்து ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக் கொள்ளவும் .பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டுப்பற்களை தனியாக எடுத்து வைக்கவும் .
பின் கடாயில் , ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, முதலில் மிளகையும், பின்னர் சீரகத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். மேலும் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு, பூண்டைப் போட்டு, நன்றாக சிவக்கும் வரை வதக்கி எடுத்து, மிளகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து மை போல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மீதி எண்ணையை கடாயில் விட்டு . அதில் கடுகைப் போட்டு தாளித்து , வெங்காயம், கறிவேப்பிலைப் போட்டு சிறிது வதக்கவும்.
அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகு விழுதைப் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கலக்கி விடவும். மிண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்துப் பின்னர் இறக்கி வைக்கவும்.