
சமைக்க தேவையானவை
- முள்ளங்கி- 1/4 கிலோ
- கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
- பெருங்காயம்- ஒரு சிட்டிக்கை
- துவரம்பருப்பு- 1/2 கோப்பை
- தக்காளி- 2
- வெங்காயம்- 2
- மிளகாய்த்தூள்- இரண்டு தேக்கரண்டி
- சாம்பார் தூள் – ஒரு தேக்கரண்டி
- தனியாத்தூள்- இரண்டு தேக்கரண்டி
- மஞ்சத்தூள்- அரைத் தேக்கரண்டி
- பூண்டு- நான்கு பற்கள்
- பச்சை மிளகாய் – இரண்டு
- உப்பு- தேவைக்கேற்ப
- எண்ணெய்- தேவைகேற்ப
- கடுகு, உளுந்து, சீரகம்- ஒரு தேக்கரண்டி
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
- காய்ந்தமிளகாய்- இரண்டு
- வெங்காயம்- இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக அரிந்து கொள்ளவேண்டும் . முள்ளங்கியை வட்டமாக அரிந்து கொள்ளவும். துவரம் பருப்பை கழுவி மஞ்சள்தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய்,வெந்தயம் போட்டு தாளித்து பச்சைமிளகாய், வெங்காயம் மற்றும் முள்ளங்கியைசேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் தக்காளி, சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து கிளறவும். அதில் 3கப் தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து வந்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்க்க வேண்டும் . ஒரு கொதி வந்தவுடன் புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும் கொத்துமல்லி தூவி அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இப்போது சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.