குழம்பு
மோர் குழம்பு

சமைக்க தேவையானவை
- புளிக்காத தயிர் – ஒரு கப்
- துவரம் பருப்பு – 1 ஸ்பூன்
- அரிசி – 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
- தேங்காய் -கால் கப்
- மஞ்சள் தூள், உப்பு – தேவையான அளவு
- எண்ணைய், – தாளிக்க
- கடுகு – 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
- சீரகம் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் அரிசி,துவரம் பருப்பு இரண்டையும் அரை மணீநேரம் ஊற வைக்கவும். பின் தேங்காய். அரிசி, துவரம் பருப்பு, பச்சை மிளகாய்,சீரகம் சேர்த்து நன்கு வழுவழுவென்று அரைத்துக் கொள்ளவும்.
தயிரில் உப்பு மஞ்சள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இத்துடன் அரைத்த தேங்காயை சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காயவிட்டு கடுகு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து இதனுடன் மோர் கலவையை சேர்க்கவும்.
நன்கு நுரை கூடி வரும் நேரம் தீயை அணைத்து விடவும். கமகம மோர்க்குழம்பு தயார். காய்கள் வேண்டுமென்றால் வேகவைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1
1