
சமைக்க தேவையானவை
- மொச்சைப்பருப்பு ஒரு கப்
- தேங்காய்ப் பால் அரை கப்
- கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன்
- புளி நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்),
- துவரம் பருப்பு – அரை கப்
- பாசிப்பருப்பு – அரை கப்
- சாம்பார் பொடி 3 டீஸ்பூன்
- கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை
- கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை
முதலில் புளிக் கரைசலுடன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவேண்டும்.
பின் குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலை விடவேண்டும்.
பிறகு குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1