
சமைக்க தேவையானவை
- ராகி சேமியா – 100 கிராம்
- உருளைக்கிழங்கு – 4
- கேரட் – 1
- வெங்காயம் – 1
- கரம் மசாலாத்தூள் -2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- மிளகாய்த்தூள் – தேவையான அளவு
- வேர்க்கடலை – 4 ஸ்பூன்
- சோம்பு – 1/4 ஸ்பூன்
- எண்ணெய் – 50 கிராம்
- மைதா – 4 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவிய எடுத்துக்கவும். உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து வேகவைத்து கொள்ளவும். ஒரு பக்கம் பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு தண்ணீர் மாற்று உப்பு சேர்த்து மைதாவை தண்ணியாக கரைத்து கொள்ளவும்.
ராகி சேமியாவை மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சோம்பு, வேர்க்கடலை மற்றும் சிறிதளவு கொத்தமல்லி முதலியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையை உருட்டி தட்டையான வாடுவத்தில் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடான பிறகு கட்லெட்டை மைதாவில் முக்கி அடுத்து அரைத்து வைத்த ராகி சேமியாவில் பிரட்டி சூடான எண்ணெய்க்குள் போட்டு வறுக்கவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும். சுவையான ராகி சேமியா கட்லெட் தயார்.