
சமைக்க தேவையானவை
- ஏலக்காய் – 2
- பூண்டு – 6 பல்
- நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- பிரியாணி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
- சோம்பு – அரை டீஸ்பூன்
- பிரிஞ்சி இலை – ஒன்று
- நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினாத்தழை – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
- பட்டை – சிறிய துண்டு
- பெரிய வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)
- ராகி சேமியா – ஒரு கப்
- தக்காளி – ஒன்று (நறுக்கவும்)
- நறுக்கிய பீன்ஸ், கேரட் – தலா 2 டேபிள்ஸ்பூன்
- பச்சைப் பட்டாணி – 50 கிராம்
செய்முறை
முதலில் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், சோம்பு, பூண்டு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கவேண்டும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், கேரட், புதினா, மஞ்சள்தூள் சேர்த்து மேலும் வதக்கவேண்டும்.
பிறகு இதில் 2 கப் நீர் விட்டு, பிரியாணி மசாலாத்தூள் சேர்த்து, சிறிதளவு நல்லெண்ணெய் விடவும் (இதனால் சேமியா உதிர் உதிராக வேகும். இப்போது ராகி சேமியாவைப் போட்டு கிளறி, வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1