
சமைக்க தேவையானவை
- காடை – 4
- சீரகச் சம்பா அரிசி – 750 கிராம்
- பெரிய வெங்காயம் – 150 கிராம்
- தேங்காய்ப்பால் – 100 மில்லி
- தக்காளி – 100 கிராம்
- பட்டை – 2
- பச்சை மிளகாய் – 5
- பிரிஞ்சி இலை – ஒன்று
- புதினா இலை – 50 கிராம்
- இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்
- கொத்தமல்லித்தழை – 50 கிராம்
- மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – 100 மில்லி
- ஏலக்காய் – 2
- நெய் – 50 மில்லி
- கிராம்பு – 4 , தயிர் – 50 மில்லி
- மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
சீரகச் சம்பா அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும்
இதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கியதும், தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும். கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும். பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.