
சமைக்க தேவையானவை
- வரகு அரிசி – 2 டம்ளர்
- மைசூர் பருப்பு – 1/4 டம்ளர்
- பாசிப்பருப்பு – 1/4 டம்ளர்
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 6
- பட்டை, லவங்கம், கிராம்பு – சிறிதளவு
- புதினா, கொத்தமல்லி – கைப்பிடி அளவு
- இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- மஞ்சள்பொடி – 1 டீஸ்பூன்
- நெய் – 2 கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- முந்திரிப்பருப்பு – சிறிதளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வரகு அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி இரண்டையும் சற்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும். மற்றொரு கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
கொதிக்கும் வெங்காய மசாலா கலவையில் ஒரு கப் அரிசிக்கு இரண்டு தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் விட்டு, அதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பு மற்றும் மைசூர் பருப்பை போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து வேகவைக்கவும்.
நன்றாக வெந்ததும் கடுகு, சீரகம், முந்திரிப்பருப்பு தாளித்துக் கொட்டவும். சுவையான மசாலாப் பொங்கல் தயார். புதினா துவையல், தக்காளித்தொக்கு, ஊறுகாய் போன்றவை அருமையான இணைகள்.