
சமைக்க தேவையானவை
- கேரட் – 1ல் பாதி (துருவியது)
- பீட்ரூட் – 1 துண்டு (துருவியது)
- பட்டாணி – 1/4 கப் (வேகவைத்து ஒன்றிரண்டாக மசித்தது)
- சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – தே.அ
- கரம் மசாலாதூள் – 4 சிட்டிகை
- மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன்முட்டை – 3 என்னம்
- எண்ணைய் – தேவையான அளவு
- சின்ன வெங்காயம் – 10என்னம் (பொடியாக அரிந்தது)
- தக்காளி – 1 என்னம் (வேகவைத்து தோலுரித்து மசித்தது)
- உருளைக்கிழங்கு – 1 துண்டு (வேகவைத்து மசித்தது)
- பச்சை மிளகாய் – 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணையை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு ஒரு வதக்கு வதக்கி உப்பு சேர்க்கவும்.பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி எல்லா தூளையும் சேர்த்து நன்கு கிளறவும்.
பின் எல்லா காய்கறிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.கொஞ்ச நேரம் வதக்கி பின் ஆறவைக்கவும்.
பின் முட்டையை அடித்து அதனுடன் காய்கறிகலவையை போட்டு நன்கு கலக்கவும்.பின் அவற்றை சிறு சிறு ஆம்லேட்களாக வார்த்து எண்ணையை ஊற்றி திருப்பி போட்டு நன்கு வேகவைத்து எடுக்கவும். .
உங்களுக்கு இந்த டிஷ் பிடிக்குமா ?
+1
+1
+1
+1
+1
+1
+1